Friday, May 8, 2015


பிறப்பால் ஒடுக்கப்படுகிறவன்
        செ.டானியல்ஜீவா

சென்ற மாதத்ததுடன்
அவளுக்கும் எனக்குமான
உறவு அறுந்து போனது அல்லது
முறிந்து போனது

ஏன் இப்படி ஆனது ..?
இறைவனால் கைவிடப்பட்ட
குழந்தை நான்
பிறப்பால் ஒடக்கபடுகிறவன்
நீயும் ஒதுக்கி ஒடுக்கலாமா

உன்மண்றாடல்
இறைவனுக்கு கேட்டிருக்கும்
இறைவன் ஏதேனும்
உனக்குச் சொல்லியிருக்கக் கூடும்
நாம் அவற்றை பகிர்ந்து கொள்வதற்கும்
நேரமற்று காலம் கரைந்து விட்டது

ஒருவரை முழுமையாக
அன்பு செலுத்துதல்
கடவுளின் விருப்பம் அல்லது
இயல்பில் மனிதனிடம்
இருக்க வேண்டிய
நற்பண்புகளில் ஒன்றல்லவா.?

மீழமுடியாத துயர்
கசிகிறது.
நேற்றையப் போல்
இன்றில்லைத்தான்
ஆனால்
நேற்றிய வாசனை
இன்னும் உயிருடன்

 உறைந்து போன உணர்வால்
மனிதனுக்கு பயனில்லை என்று
நான் நினைக்கிறேன்.
நான் சபிக்கபட்ட  இருளின்
இடையில் தோன்றும் வெளிச்சம்
நீ மோட்சத்தின் வாசல் என்றே
வைத்துக் கொள்கிறேன்.

உன்னோடு இரத்தமும் சதையுமாய்
நான் வாழ்திருக்கிறேன்
என்னை உன் நினைப்பு
அலைக்கழிக்கின்றன
வெறுமை மிகுந்த
கனவாகுப் போகிறது வாழ்க்கை

யாரும் யாருடனும் நொந்து பயனில்லை
இருக்கும் போது இணைந்திருப்பத்தில்
தவறில்லையே


நன்றி.கூர்

No comments:

Post a Comment

  டானியல் அன்ரனி ( 1947.07.13 - 1994) யாழ்ப்பாணம் , நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் , விமர்சகர் , பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதை...