Sunday, May 31, 2015

டானியல் அன்ரனி

-சசி கிருஷ்ணமூர்த்தி-

வலை’ எறிந்தும் ‘சமர்’ புரிந்தும் கடந்த கால் நூற்றாண்டுகளாக ஈழத்து இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டிருந்த டானியல் அன்ரனி என்ற படைப்பாளி யாரும் எதிர்பாராத வகையில் அண்மையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 47.
கலை இலக்கிய முயற்சிகள் அனைத்தும் ஓர் புதிய வாழ்கைக்கான மாபெரும் போராட்;ட த்தின் ஒரு பகுதி என்பதில் நம்பிக்கை கொண்ட டானியல் அன்ரனி, அந்த நம்பிக்கையை தனது படைப்புக்களில் வெளிப்படுத்தும் வாழ்வுக்கு விசுவாசமாகவும் இருந்தவர். எழுத்தாள னாக, பத்திரிகை ஆசிரியனாக, விமர்சகனாக இயங்கி வந்த இவரிடம் ஈழத்து இலக்கிய உலகம் இன்னும் எதிர்பார்த்திருந்த வேளையில் தான் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்திருக்கிறது.
ஆரம்பத்தில் எழுத வேண்டும் என்ற ஆவல் உந்த, மிகச் சாதாரண சிறுகதைகளை ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்த டானியல் அன்ரனி காலப்போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும், நல்ல இலக்கியங்களில் ஏற்பட்ட பரிச்சயம் காரணமாகவும் சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். பொதுவாக தான் வாழ்ந்த கடல் சார்ந்த மக்களின் வாழ்வை அந்த வாழ்வில் அவதானித் த முரண்பாடுகளை அவரது சிறுகதைகள் வெளிப்படுத்தின. மல்லிகை,வீரகேசரி,சிரித்திரன், கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவை பெரும்பாலும் வெளிவந்தன. கலைத்துவ நோக்கில் இச்சிறுகதைகளில் சில நெருடல்கள் இருந்தாலும் அவை புறந்தள்ளக் கூடிய வை அல்ல.
டானியல் அன்ரனி பற்றிய இந்த அஞ்சலிக் குறிப்பை எழுதும் போது அவர் இலக்கியப் பயணம் தொடங்கிய காலத்தில் அவரோடு பயணித்த அனுபவம் செஞ்சில் நிழலாடுகின்ற து. வாழ்வின் சுமையறியாத காலத்தில், இலக்கியக் கனவுகளுடனும், தேடலுடனும் கழி ந்த நாட்கள் டானியல் அன்ரனியை நினைவு கூரக்கூடியன.
‘சிரித்திரன்’ காரியாலயம் அப்போது நாவலர் வீதியில், மனோகராத் தியேட்டருக்கு அரு கில் இருந்தது. அதற்கு அருகில் தான் ராதேயன் வீடும். ராதேயன் வீட்டிற்கு அப்போது பல இலக்கிய நண்பர்கள் வந்து போவார்கள். சிறுகதைகள் எழுதி வந்த டானியல் அன்ர னியையும், கவிதைகள் எழுதி வந்த பாலகிரியையும் இங்கே தான் சந்திக்க முடிந்தது. சிரித்திரன் காரியாலயத்தில் சுந்தரின் பத்திரிகைக் கலை அனுபவங்களும்,ராதேயன் வீட்டு இலக்கிய நண்பர்களின் சந்திப்பும் அன்றைய மாலை வேளைகளை அர்த்தமாக்கின.
அப்போது காணப்பட்ட வியட்நாம் போரின் உணர்வுகளும், யாழ்ப்பாணத்தில் சாதிப் போரா ட்டத்தின் தாக்கமும், மாஓவின் புகழோங்கிய நிலையும், முற்போக்கு இலக்கியத்தின் உர த்த குரலும் எங்களைப் பாதிக்கத் தவறவில்லை. சமூகமாற்றம், சோசலிஷம் ஆகியவற் றைப் புரிந்து கொள்வதற்கும், அதனை அடைவதற்கும் கலை இலக்கியங்களின் பங்குப் பணியில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தோம். இந்த ஆர்வம் எமது கலை இலக்கிய ஈடுபாட்டை மென்மேலும் விசாலிக்கச் செய்தது.
சமூக நோக்குடைய நல்ல இலக்கியங்களைத் தேடிப் படிப்பதும், நல்ல திரைப்படங்களை ரசிப்பதும் எமது தேடல்களாக இருந்தன. அப்போது தான் நாங்கள் ஏன் ஒரு இலக்கிய அமைப்பினை தோற்றுவிக்கக் கூடாதென்ற எண்ணம் எமக்கேற்பட்டது. எண்ணம் செயற்பட செம்மலர் இலக்கிய வட்டம் உருவானது. (ஏறக்குறைய 1970களாக இருக்கலாம்) இதன் உருவாக்கத்தில் ராதேயன் பாலகிரி, டானியல் அன்ரனி ஆகியோர் தான் முக்கியமானவர்கள். அதன் தலைவராக துடிப்புடன் செயற்பட்டவர் டானியல் அன்ரனி. இலக்கிய கலந்து ரையாடல், நூல் விமர்சனம் என அடிக்கடி நடைபெறும். இவ்விலக்கிய வட்டத்தின் செய ற்பாடுகள் பரவலாகத் தெரிய வரலாயிற்று. அப்பொழுது இலக்கியப் பயணத்தை மேற்கொ ண்டிருந்த பலரும் இவ்வட்டத்துடன் நெருக்கமுறலாயினர். வ.ஜ.ச.ஜெயபாலன், நந்தினி சேவியர், பூனகர் மரியதாஸ், ஞாயிறு கையெழுத்துப் பிரதிகளுடன் கூட்டங்களுக்கு வந்து போன சேரன்,மற்றும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் அப்போது கல்வி பயின்ற திக்குவல்லை கமால், அன்பு ஜவகர்ஷா, கலைவாதி கலீல் ஆகியோர் இவர்களுள் குறிப் பிடத்தக்கவர்கள்.
செம்மலர்கள் இலக்கிய வட்டத்தின் நடவடிக்கைகள் எமக்கு உற்சாகமூட்டவே, நமது வட் டம் ஏன் ஒரு சஞ்சிகையை வெளியிடக் கூடாதென்று தீவிரமாக யோசித்தோம். அதைச் செயல்படுத்தவும் முனைந்து விட்டோம். ‘அணு’ என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளி யிடுவதென்று முடிவாகியது. இச்சஞ்சிகையின் வேலைகள் தொடங்கிய போது தான் அதி லுள்ள நடைமுறைச் சிக்கல்கள் எங்களுக்குப் புரியத் தொடங்கின. எனினும் ஒரு இதழ் மிகவும் சிரமத்தின் மத்தியில் கொண்டு வரப்பட்டது. இதன் வெளியீட்டு விழா யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒரு இதழுடன் நின்றிருக்க வேண்டிய ‘அணு’ டானியல் அன்ரனியின் விடா முயற்சியினால் மேலும் இரண்டு இதழ்கள் வெளிவந் தன. அதன் பின்னர் கால நகர்வில் நாங்களும் திசைக் கொருவராகச் செல்ல செம்மலர் கள் இலக்கிய வட்டமும் தன் இலக்கிய வாழ்வை முடித்துக் கொண்டது.
‘அணு’ ஏற்படுத்திய தாக்கம் தான் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின்னர் டானியல் அன்ரனியை ‘சமர்’ வெளியிடத் தூண்டியது. நவீன கலை இலக்கியம் மற்றும் மாக்ஸிஸ அழகியல் தான் வளர்த்துக் கொண்ட ஈடுபாட்டை வெளிப்படுத்தும் தளமாக அமைத்துக் கொண்ட ‘சமர்’ எட்டு இதழ்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கவை. ஒரு தனி மனிதனைப் பொறுத்த வரையில் எட்டு இதழ்களைக் கொண்டு வந்தமை சாதனை தான். க.கைலாசப தி, சேரன், எம்.ஏ.நுஹ்மான், வ.ஜ.ச.ஜெயபாலன், முருகையன், சாந்தன், கே.எஸ்.சிவகுமா ரன், பே.சண்முகலிங்கம் ஆகியோரின் எழுத்துக்கள் ‘சமரில்’ வெளிவந்திருந்தன. ‘சமர்’ வெளிப்படுத்திய கருத்துக்கள், பார்வைகள் பல இன்று மீள் பரிசீலனைக்கு உட்படக் கூடி யன. ஆயினும் இதன் வருகை ஈழத்து சஞ்சிகை உலகில் குறிப்பிடத்தக்கது. இதை மீண் டும் கருத்து பார்வை மாற்றங்களுடன் வெளிக் கொணர வேண்டும் என்பதில் டானியல் அன்ரனிக்கு கடைசி வரையும் விருப்பம் இருந்தது. ஆனால் அந்த விருப்பம் நிறைவேறா மல் போய்விட்டது.
டானியல் அன்ரனியின் கடைசி நாட்கள் மிகவும் சோகமானவை. இன ஒடுக்கு முறையின் குரூரம் அவரையும் விட்டு வைக்கவில்லை. தொழில் பார்த்த நிறுவனம் குலைந்து போக, நிரந்தர வேலையின்மை, குடும்பப் பாரத்தின் அழுத்தம் இவற்றுக்கிடையே தான் இவரைக் கொடிய நோய் பற்றிக் கொண்டது. ஆரம்ப நிலையில் அந்த நோயின் தன்மை கண்டு பிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் மீண்டிருக்கக் கூடும். நோய் முற்றிய நிலையில் மிகவும் அச்சந் தரும் பணயத்தை மேற்கொண்டு கொழும்பு சென்றும் அவரால் மீள முடியாது போய் விட்டது.
டானியல் அன்ரனி ஒரு ‘மனிதன்’ என்ற விழிப்புடன் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் உண ர்வுடன், இலக்கியத்தை நேசித்தவர். இலக்கிய உறவினரைப் பேணியவர். இலக்கியத்துக்கு அப்பாலும் சமூக சேவை, விளையாட்டுப் போன்ற தொடர்புகளின் ஊடேயும் தான் வாழ்ந்த சமூகத்துடன் உறவு கொண்டவர். அவரது வாழ்வுப் பயணம் நண்பர்களோடு முடிவடைந்து விட்டாலும் அவர் பதித்த சுவடுகள் லேசில் அழிபட்டுப் போகாதவை.

Friday, May 8, 2015


பிறப்பால் ஒடுக்கப்படுகிறவன்
        செ.டானியல்ஜீவா

சென்ற மாதத்ததுடன்
அவளுக்கும் எனக்குமான
உறவு அறுந்து போனது அல்லது
முறிந்து போனது

ஏன் இப்படி ஆனது ..?
இறைவனால் கைவிடப்பட்ட
குழந்தை நான்
பிறப்பால் ஒடக்கபடுகிறவன்
நீயும் ஒதுக்கி ஒடுக்கலாமா

உன்மண்றாடல்
இறைவனுக்கு கேட்டிருக்கும்
இறைவன் ஏதேனும்
உனக்குச் சொல்லியிருக்கக் கூடும்
நாம் அவற்றை பகிர்ந்து கொள்வதற்கும்
நேரமற்று காலம் கரைந்து விட்டது

ஒருவரை முழுமையாக
அன்பு செலுத்துதல்
கடவுளின் விருப்பம் அல்லது
இயல்பில் மனிதனிடம்
இருக்க வேண்டிய
நற்பண்புகளில் ஒன்றல்லவா.?

மீழமுடியாத துயர்
கசிகிறது.
நேற்றையப் போல்
இன்றில்லைத்தான்
ஆனால்
நேற்றிய வாசனை
இன்னும் உயிருடன்

 உறைந்து போன உணர்வால்
மனிதனுக்கு பயனில்லை என்று
நான் நினைக்கிறேன்.
நான் சபிக்கபட்ட  இருளின்
இடையில் தோன்றும் வெளிச்சம்
நீ மோட்சத்தின் வாசல் என்றே
வைத்துக் கொள்கிறேன்.

உன்னோடு இரத்தமும் சதையுமாய்
நான் வாழ்திருக்கிறேன்
என்னை உன் நினைப்பு
அலைக்கழிக்கின்றன
வெறுமை மிகுந்த
கனவாகுப் போகிறது வாழ்க்கை

யாரும் யாருடனும் நொந்து பயனில்லை
இருக்கும் போது இணைந்திருப்பத்தில்
தவறில்லையே


நன்றி.கூர்

  டானியல் அன்ரனி ( 1947.07.13 - 1994) யாழ்ப்பாணம் , நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் , விமர்சகர் , பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதை...