Friday, February 16, 2024

 

டானியல் அன்ரனி (1947.07.13 - 1994)



யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதைகளை ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார். காலப்போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும் நல்ல இலக்கியங்களில் ஏற்பட்ட பரீட்சயம் காரணமாகவும் சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.

இவர் "செம்மலர் இலக்கிய வட்டத்தின் உருவாக்கத்தில் பங்காற்றியவர். இவ் அமைப்பினூடாக "அணு" என்ற சஞ்சிகையை வெளியிட்டார். மூன்றாவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டபின் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1979 இல் "சமர்" என்னும் சஞ்சிகையை ஆரம்பித்து 1990கள் வரை நடாத்தினார்.

Euro Asia arts & science academic international நிறுவனம் 2014.08.10 அன்று பிரான்ஸ் நாட்டில் நடாத்திய பல்துறை சார்ந்த விருது வழங்கும் விழாவில் இவரது கலை இலக்கியத்துறை மற்றும் விளையாட்டு சமூக சேவைகளைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

 

No comments:

Post a Comment

  டானியல் அன்ரனி ( 1947.07.13 - 1994) யாழ்ப்பாணம் , நாவாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் , விமர்சகர் , பத்திரிகையாளர். இவர் ஆரம்பத்தில் சிறுகதை...